இந்திய வரலாற்றாசிரியரான பிபன் சந்திரா பஞ்சாப் மாநிலம் கங்ரா (தற்போது இமாச்சலப் பிரதேசம்) பகுதியில் பிறந்தவர். இவர் நவீன இந்தியா வின் பொருளாதார ஆய்வாளராக வும், அரசியல் வரலாற்றில் சிறந்த வராகவும் திகழ்ந்தார்.
இவர் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியராகவும், பல்கலை.யின் வரலாற்று ஆய்வு மையத் தலைவராகவும் செய லாற்றினார். 1993 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சந்திரா. 2004 முதல் 2012 வரை நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்த பிபன், அதில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தார். சமூக அறிவியல், சுயசரிதை, ஆப்ரோ-ஆசிய நாடுகள் குறித்த வரிசை, இந்திய புலம்பெயர்வு குறித்த ஆய்வு உட்பட பல்வேறு புதிய புத்தக வரிசைகளை உருவாக்கினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முன்னணியில் இருந்த பிபன் சந்திரா, தி மேக்கிங் ஆப் மாடர்ன் இந்தியா: மார்க்ஸ் முதல் காந்தி வரை, நவீன இந்தியா வில் வகுப்புவாதம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி யுள்ளார். இடதுசாரி எழுத்தாளரான பிபன், என்கொயரி (Enquiry) என்ற இதழை துவக்கி, அதன் ஆசிரியர் குழுவில் நீண்ட காலம் பணியாற்றினார். நாட்டில் உள்ள பள்ளி-கல்லூரி களில் பிபன் சந்திராவின் வரலாறு குறித்த பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. 1985 இல் இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு தி ஏசியாடிக் சொசைட்டி ஆப் பீகார் அமைப்பு ‘இதிஹாஸ் ரத்னா’ விருதும், இந்திய அரசு பத்ம பூஷண் விருதும் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிபன், 2014 ஆகஸ்ட் 30 அன்று காலமானார்.