states

img

ஆந்திராவில் கார் டயர் வெடித்து லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி  

ஆந்திராவில் கார் டயர் வெடித்ததில் எதிரே வந்த லாரி மோதி கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

திருப்பதி அருகே பாக்ராபேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் காரில் ஸ்ரீசைலத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி மீது மோதியதில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், காரில் இருந்த மூன்று பேரும் தீயில் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் காரில் சென்ற கார் ஓட்டுநர் ரவூரி தேஜா, பதான் இம்ரான் கான், சகிரி பாலாஜி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.