states

img

மகனின் சடலத்தை 90.கி.மீ பைக்கில் கொண்டு சென்ற தந்தை 

ஆந்திரவில் மகனின் சடலத்தை 90கி.மீ பைக்ல் தந்தை கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. 
ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது 10 வயது மகன் ஜெசேவா  சிறுநீரக பாதிக்கப்பட்டதால் திருப்பதி ரூயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை ஜெசேவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகன் உடலை மருத்துவமனையில் இருந்து தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்சை அணுகினார். 
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிக அளவு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் பணம் இல்லாததால்  உறவினர் ஒருவரை  இரு சக்கர வாகனத்தை எடுத்து வர கூறி அந்த பைக்கில் சிறுவனின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.
திருப்பதியில் இருந்து பெத்வேல் கிராமம் சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அந்த தூரத்திற்கு மகனின் உடலை இருசக்கர வாகனத்திலேயே கொண்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோவை  ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர்  சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.