science

img

உலகின் அதிவேகமான ஆல்பா எக்ஸ் ரயில் சோதனை ஓட்டம்!

உலகிலேயே அதிவேகமாக செல்லக்கூடிய ஜப்பான் நாட்டின் புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. 

ஜப்பான் நாட்டில், ஆல்பா எக்ஸ் என்ற உலகத்தின் அதிவேக புல்லட் ரயிலை தயாரித்து உள்ளது. மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த ரயிலானது இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் மற்றும் ஓமோரி ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் வரும் 2030ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சீனாவின் அதிவேக புல்லட் ரயிலான ஃபிக்சிங்கை காட்டிலும் ஜப்பானின் இந்த ஆல்பா எக்ஸ் மணிக்கு பத்து கிலோமீட்டர் அதிகமாக செல்லக்கூடியது. இந்த ரயிலின் முன்பக்கத்தை வடிவமைக்க சுமார் 10 கார்களின் டிசைன்களை அலசியுள்ளது இந்த பொறியாளர்கள் குழு. ஜப்பானின் செண்டாய் மற்றும் அமோரி மாகாணங்களுக்கு இடையே இந்த ரயிலானது இயக்கப்பட இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்திருக்கிறது.

போக்குவரத்து துறை வளர்ச்சியில் இந்த அதிவேக புல்லட் ரயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வல்லுனர்கள் கணிக்கிறார்கள். இதேபோல் ஜப்பானின் மற்றுமொரு அதிவேக புல்லட் ரயிலான ஷின்கான்சென் N700S மாடலும் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயிலானது 2020ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


;