science

img

3-வது சுற்றுவட்டப் பாதைக்கு முன்னேறிய “ஆதித்யா எல் 1”

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ  கடந்த செப்., 2 அன்று பிஎஸ்  எல்வி-சி57 ராக்கெட் மூலமாக  “ஆதித்யா எல் 1” விண்கலத்தை விண்  ணில் ஏவியது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு புவியின் சுற்றுவட்டப்பாதையில் “ஆதித்யா எல் 1” விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், செப்., 3 அன்று  விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப் பாதை  மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த செவ்வாயன்று 2-வது சுற்று வட்டப் பாதைக்கு முன்னேறியது “ஆதித்யா எல் 1”. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுப் பாதையின் உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பூமியில் இருந்து குறைந்தபட்சம் 296 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 71,767 கி.மீ. தொலைவிலும் இருக்கும் படி அதிகரிக்கப்பட்டதாகவும், 4-வது கட்ட  சுற்றுப் பாதை மாற்றியமைப்புப் பணிகள்  வரும் 15 அன்று அதிகாலை சுமாா் 2.30  மணிக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக வும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.