science

img

நிலவில் விக்ரம் லேண்டரை உயர்த்தி மீண்டும் தரையிறக்கம்!

நிலவில் விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தப்பட்டு மீண்டும் 30 - 40 செமீ தொலைவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வந்த சந்திரயான்- 3 விண்கலத்தின் ரோவர், தற்போது பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு ஓய்வு நிலைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், நிலவில் விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தப்பட்டு மீண்டும் 30 - 40 செமீ தொலைவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
விக்ரம் லேண்டரின் செயல்பாடு வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும், லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளுக்கு நன்றாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.