science

img

“ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் அது மற்றொரு மைல்கல்”: வீர முத்துவேல்

சென்னை, செப். 14- நிலவின் தென் துருவத்தில் நித்திரை கொண்டுள்ள பிரக்யான் ரோவர் மீண்டும் செயல்படுமா என்ற கேள்விக்கு சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பதிலளித்துள்ளார். சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சி யில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வரு கின்றன. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான்  ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்று விட்டது. 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. இதனால் 14 நாட்களுக்கு பின் அதை இயங்க  வைக்கும் பணிகள் நடக்கும். இன்னொரு பக்கம் இதில் விக்ரம் லேண்டர் தரை யிறங்கிய இடத்தில் இருந்து ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையில் அதுவும் தூக்க நிலைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றுவிட்டது. 14 நாட்களாக பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில்தான் அங்கு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தற்போது இரண்டை யும் தூக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ள னர். அடுத்த வாரம் இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நில வில் மீண்டும் வெற்றிகரமாக கண் விழிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை அதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரு கிறது. நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவு வதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

இதனால் சந்திரயான்-3ன் நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சந்திரயான்-3 இன் லேண்டர், ரோவர் இரண்டுமே நிலவு பயணங்களுக்கான பொதுவான ஹீட்டர்கள் கொண்டு இருக்கவில்லை. அதாவது நடுங்கும் இந்த குளிரை தாக்கு பிடிக்க எந்த வசதியும் இரண்டிலும் செய்யப்படவில்லை. பொதுவாக ரேடியோ ஐசோடோப் ஹீட்டர் யூனிட்கள் எனப்படும் ஹீட்டர்கள் சரியான வெப்ப நிலையில் வைத்திருக்க, இது போன்ற கருவிகள் அவசியம். ஆனால் அத்தகைய சக்தி அமைப்புகள் இல்லாமல், சந்திரயான் -3 இன் வாழ்க்கை என்பது சந்தேகம்தான். இதனால் தற்போது நிலவில் நிமிடங்கள் திக் திக் என்று நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பெங்களூருவில், தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு வீரமுத்துவேல் அளித்த பேட்டியில், விக்ரம் லேண்டர்  நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது, அதில் இருந்து சிக்னல் கிடைத்தது தன்னை  தானே கிள்ளி பார்த்துக் கொண்டது உணர்ச்சிப் பெருக்கோடு தெரிவித்துள்ளார். சூரிய மின் சக்தியை மட்டும் வைத்து ரோவர் இயங்குவதால் அதன் மீது சூரிய  ஒளி பட்டால் தான் எழுந்து வேலை செய்யும். ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் அது மற்றொரு மைல்கல்லாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் சூரியன்  உதிக்கும்போது, ரோவர் செயல்படுமா என்பது தெரியவரும் என்று கூறிய வீரமுத்து வேல், சந்திரயான் 3 திட்டத்தின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறி விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.