science

img

ஜி.எஸ்.எல்.வி எஃப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி எஃப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை 10.42 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி எஃப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதில் 2,232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்–01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலம் மற்றும் கடற்பரப்பில் பயணிக்கும் இடம் மற்றும் தொலைவை மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

;