science

img

சந்திரயான் 2 பயண நாள் 47 நாட்களாக குறைப்பு

சந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாள், 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர்.

சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த 15-ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் உருவான தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது சந்திரயான் 2 விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து மீண்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பறக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது. வரும் 22-ஆம் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2.59 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. 
ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 ராக்கெட் அந்த விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நீள்வட்ட சுற்றுப்பாதையில் கொண்டு போய்விடும். அதன் பிறகு சுமார் 40 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சந்திரயான் 2 விண்கலம் பயணத்தை மேற்கொள்ளும்.

நிலவின் அருகில் நெருங்கி செல்ல 54 நாட்கள் தேவைப்படும் என்று முதலில் விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். தற்போது சந்திரயான் 2 விண்கலத்தின் பயண நாளை 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர். செப்டம்பர் மாதம் நிலவில் இந்த விண்கலம் தரை இறக்கப்படும். திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 
 

;