சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை உயரம் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் எல்.வி.எம் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் விண்கலம் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி, மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட உள்ள நிலையில், இன்று விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை உயரம் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை Lander Position Detection Camera (LPDC) மூலம் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து விக்ரம் லேண்டர் அனுப்பியதை புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.