science

img

சந்திரயான்-3: நிலவில் ரோவர் கால்பதிக்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ

சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர், நிலவில் கால்பதிக்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் 40 நாட்கள் பயணித்து, நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள 4-ஆவது நாடாக இந்தியா உள்ளது. இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக பிரிந்தது. இந்த ரோவர் நிலவின் தென் துருவப் பகுதியில், 14 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது.
இந்த நிலையில், லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர், நிலவில் கால்பதிக்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.