science

img

நிலவில் ஆர்கான் 40 வாயுவை கண்டறிந்த சந்திராயன்2

நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பதை சந்திராயன் 2 விண்கலம் உறுதிப்படுத்தி உள்ளது என்ற இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது
நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பியது. அதில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் செயலிழந்தாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை  ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ்2 என்ற கருவி உறுதிப்படுத்தி உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ஆர்fகான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக்கூடியது. இந்த வாயு பூமியில் அரிதாக காணப்படும் என்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 

;