science

img

ஆதித்யா- எல்1 விண்ணில் ஏவ தயார் – இஸ்ரோ!

விண்ணில் ஏவத் தயார்நிலையில் இருக்கும் ஆதித்யா- எல்1-இன் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ சந்திரனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல்1 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவத் திட்டமிட்டு உள்ளது.

ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோமீட்டா் உள்பட 7 விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.

சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 சுமாா் 400 கிலோ எடை கொண்டது. பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அந்தப் பகுதியில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலையாக இருக்கும். அதனால் அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புற பகுதியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்-1 மேற்கொள்ள உள்ளது.