சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 4-ஆவது முறை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சூரியனை நோக்கி அதன் சுற்றுவட்டப் பாதையை படிப்படியாக உயர்த்தும் பணிகள் மூன்றுகட்டமாக வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், நான்காம் கட்டமாக இன்று அதிகாலை சுற்றுவட்டப் பாதையின் உயரத்தை உயர்த்தும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்
புதிய சுற்றுவட்டப் பாதையின் உயரம் 256 கி.மீ. X 121973 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது.
செப்.19-ஆம் தேதி புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
5-ஆவது முறை சுற்றுவட்டப் பாதை உயர்வு நடவடிக்கை வரும் 19-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.