சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த செப்., 2 அன்று “ஆதித்யா எல்-1” என்ற பெயரிலான விண்கலத்தை ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண் ணில் ஏவியது. தற்போது “ஆதித்யா எல்-1” விண்கலம் சூரியனை நோக்கி புவி சுற்றுவட்டப்பாதையில் செல்லும் நிலை யில், “ஆதித்யா எல்-1” விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக் கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்கலத்தின் வெல்க் (VELC), சூட் (SUIT) கருவி களின் புகைப்படம், நிலா மற்றும் பூமியின் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள் ளன. இது குறித்து இஸ்ரோ வெளியிட் டுள்ள டுவிட்டர் எக்ஸ் பதிவில், “சூரி யனை நோக்கி தனது பயணத்தை மேற் கொண்டு வரும் “ஆதித்யா எல்-1” விண் கலம் நிலா மற்றும் பூமியை செல்பி முறையில் புகைப்படம் எடுத்துள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.