science

img

36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த ‘எல்விஎம்-3’ ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, அக்.23- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 36 செயற்கைகோள்களுடன் ‘எல்விஎம்-3’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்தியாவின் மிக பெரிய பிரம்மா ண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தைச் சேர்ந்த ‘எல்விஎம்-3’ கரு தப்படுகிறது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை இயந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’ நிறுவனம் இணை யப் பயன்பாட்டுக்கான 36 செய ற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அவற்றை விண் ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விடம் ஒப்படைத்தது. 36 செயற்கைக்கோள்களும் அக்டோபர் 22 அன்று நள்ளிரவு 12.07 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ‘எல்விஎம் 3’ ராக்கெட் மூலம் விண்ணில்  ஏவப்பட்டது.  விண்ணில் ஏவப்பட்ட 19 நிமிடத்தில்  36 செயற்கைக்கோள்களும் வெற்றிகர மாக திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலை யில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.