ஸ்ரீஹரிகோட்டா, செப்.2- சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண் கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. ஏவப்பட்டத்தில் இருந்து மூன்று படி நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அது சரியான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞா னிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலன் 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடையும். பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சி யன் பாயிண்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப் புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ‘ஆதித்யா’ மேற்கொள்ளும். முன்னதாக, விண்கலத்தை ஏவு வதற்கான 23.40 மணி நேர கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணி களில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் குறிக்கப்பட்ட நேரத்தில் வெற்றிகரமாக விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் விண்கலம்
சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப் பும் முதல் விண்கலமான ஆதித்யா- எல்1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. இதில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன. ஆதித்யா-எல்1 அதிநவீன விண் கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம் (இஸ்ரோ) மற்றும் விஞ்ஞானிகள் குழு வடிவமைத்தது. இதில், வான் இயற் பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற் றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக் கழக மையம், இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.
குடியரசுத்தலைவர் பிரதமர் பாராட்டு
சூரியனை ஆராய்வதற்காக அனுப் பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலன் பூமி யின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், அந்த வெற் றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டு தெரி வித்துள்ளனர்.