politics

img

மு.க.ஸ்டாலின் 2ஆவது கட்ட பிரச்சாரம்

சென்னை, மே 13-4 தொகுதி இடைத்தேர் தலுக்கான இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று தொடங்குகிறார்.ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக செவ்வாய் முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். செவ்வாயன்று ஒட்டப்பிடாரத்திலும், புதன்கிழமை திருப்பரங்குன்றத் திலும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.சூலூர் தொகுதியில் 16 ஆம் தேதியும், அரவக்குறிச்சிதொகுதியில் வரும் 17ஆம் தேதியும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

;