politics

img

16 லட்சம் கான்கிரீட் வீடுகள்

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,

“தமிழகத்தில் 16 லட்சம் குடிசை வீடுகள் உள்ளன. இதில் ஆறு லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் 2023 ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடித்துக் கொடுக்கப்படும். தமிழகத்தில் குடிசைகள் மாற்றப்பட்டு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” என்று கூறினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக பிரச்சாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

;