politics

வாக்குச் சாவடிக்கு பூட்டு போட பொதுமக்கள் முயற்சி

தூத்துக்குடி, ஏப்.18-கோவில்பட்டி அருகே வாக்குச்சாவடி மாற்றப்பட்டதால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு பூட்டுபோட முயன்றனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆத்திகுளத்தில் 1600-க்கும் மேற்பட்டவாக்காளர்கள் உள்ள நிலையில், அங்கு அமைக் கப்பட்ட மையத்தில் 600 வாக்காளருக்கு மட்டுமே பெயர் உள்ளதாலும், மற்றவர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் வாக்குச்சாவடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு பூட்டு போட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

;