மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாகை, திருப்பூர் தொகுதிகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் எம்.செல்வராசு (நாகை), கே.சுப்பராயன் (திருப்பூர்) ஆகியோர் திங்களன்று சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தனர். உடன் சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆறுமுகம், பெரியசாமி, நாகை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உள்ளனர்.