internet

img

ஆயிரக்கணக்கான பயனர்களை குறிவைத்துள்ள ஹேக்கர்கள் - கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

உலக அளவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கூகுள் பயனர்களை ஹேக்கர்கள் குறிவைத்திருப்பதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலகட்டத்தில், சுமார் 12,000 பயனர்கள் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இப்பயனர்கள் அனைவரும் உலகிலுள்ள 149 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இந்தியாவில் 500 வரையான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 2017-ஆம் ஆண்டு மற்றும் 2018-ஆம் ஆண்டின் இதே மாத காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஹேக் முயற்சிகளின் எண்ணிக்கையுடன் ஏறத்தாழ ஒத்துப்போவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 2019 ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில் வாட்ஸ்அப் மூலம் சுமார் 1400 பயனர்கள் உலகளவில் தகவல் திருட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 121 பயனர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.