இன்ஸ்டாகிராமில் இருந்த பிழையை கண்டறிந்த சென்னையை சேர்ந்த லக்ஷ்மன் முத்தையா என்ற இளைஞருக்கு, 10000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7.2 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்திலும், முத்தையா, இன்ஸ்டாகிராமில் இருந்த இதே போன்று பிழையை கண்டறிந்திருந்தார். அப்போது அவருக்கு 30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21.6 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சர்வரில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் கோளாறு இருப்பதாகவும், இதை கொண்டு பல்வேறு பயனர்களுக்கான பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என முத்தையா இம்முறையும் கண்டறிந்திருக்கிறார்.
முத்தையா கண்டறிந்திருக்கும் பிழையை கொண்டு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை மிக சுலபமாக ஹேக் செய்திட முடியும். இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு, அவருக்கு 10,000 டாலர்கள் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.