india

img

சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் தண்டனைக்கு அஞ்சி தற்கொலை

ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி சிங்கிரேனி காலனியில் வசித்து வந்த 6 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ராஜு என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்று அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர் சைதாபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமி கடைசியாக ராஜு வீட்டிற்குச் சென்றது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து ராஜுவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிறுமியின் உடல் அங்கிருந்த படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால். குற்றவாளியான ராஜு சம்பவ இடத்தில் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், ராஜு மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 10 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர்.

மேலும், ராஜுவின் புகைப்படத்தை வெளியிட்டு இவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அஞ்சனிகுமார் அறிவித்திருந்தார். நேற்று இது குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இன்று அவரின் உடல் கானப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தண்டனைகளுக்கும் பயந்து இவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜுவின் உடலை தெலங்கானா காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

;