ஆள் கடத்தல் புகாரால் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் 276 இந்தியர்களுடன் இன்று மும்பை திரும்பியது.
கடந்த வியாழக்கிழமை துபாயில் இருந்து 303 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், பிரான்ஸ் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த விமானத்தில் பெரும்பாலும் இந்தியா்கள்பயணித்த நிலையில், விமானத்தில் ஆள்கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகமடைந்து இதையடுத்து அந்த விமானம் நிகரகுவா (மத்திய அமெரிக்கா) புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாகப் பயணிகளிடம் பிரான்ஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர்.
எனினும் விமான நிலையத்தில் இந்தியர்களைத் தடுத்து வைப்பதற்கான நடைமுறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளால், விசாரணையை ரத்து செய்ய நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தனர்.
அந்த விமானம் பிரான்ஸிலிருந்து புறப்பட அந்நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தனர்.
பயணிகளில் சிலா், திட்டமிட்டபடி நிகரகுவா செல்ல விரும்புகின்றனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 48 பயணிகள் பிரான்ஸில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் ஒன்று ஆள்கடத்தலில் ஈடுபடுவதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், 2 பயணிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
பிரான்ஸில் தடுத்த நிறுத்தப்பட்ட இந்தியர்கள் சென்ற விமானம் அந்நாட்டில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டு, 276 பயணிகளுடன் காலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது.