india

img

வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான் பூச்சி.. பயணி புகார்!

மும்பை, ஆக.21 - வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சியடைந்த பயணி, இது குறித்து புகார் அளித்துள்ளார்.

ஷீரடியிலிருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உணவின் தரம் குறித்து, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம். இந்த சம்பவமானது மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது. உணவு அளிக்கும் சேவை வழங்குநருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது, மேலும், சமையலறை முழுவதையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது.

இந்நிலையில், உணவில் கரப்பான் பூச்சி இருப்பது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே துறையின் இந்த அலட்சியப் போக்கிற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.