மணிப்பூர் மாநிலம், இம்பாலில் எல்லைப் பாதுகாப்புப் படையின்(BSF) தலைமைக் காவலர் சதீஷ் பிரகாஷ் கையில் துப்பாக்கியுடன் பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த பெண்ணிடம் முதலில் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளார். இதனை அடுத்து, அந்த பெண்ணை கன்னத்திலும், உடம்பிலும் தொட்டு பேசியுள்ளார். அந்த பெண் விலகி செல்ல முயன்றபோது, அவரது கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துள்ளது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் ராணுவப் படைக்கு புகார் வந்ததையடுத்து, அந்த ராணுவ வீரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.