தோல்வி பயத்தில் உள்ள மோடி அரசு, மக்க ளவைத் தேர்தலில் சுதந்திரமாக செயல்பட முடி யாதபடி வருமான வரித்துறை மூலம் “இந்தியா” கூட்டணி கட்சி களுக்கு அடுத்தடுத்து அபராத நோட்டீஸ் அனுப்பி வருகிறது. கடந்த மாதம் ரூ.14 லட்சத்திற் கான வரியை தாமதமாக செலுத் தியதாக கூறி காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி ரூபாய் அபராதம் விதித்து, 4 வங்கி கணக்குகளை முடக்கி, ரூ.135 கோடியை பறித் தது. இதுதொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை தீர்ப்பாயம் மற்றும் தில்லி நீதிமன்றம் தள்ளு படி செய்தது.
ந்த 5 நிதியாண்டுகளில் சரி யாக வருமான வரி செலுத்த வில்லை என்று கூறி மீண்டும் ரூ.1,823 கோடி வரி அபராதத் தொகை விதித்தது. அன்றைய தினம் மாலையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை ரூ.11 கோடி அபராத நோட்டீஸ் அனுப்பியது. இந் நிலையில், ஞாயிறன்று 2014-15 முதல் 2016-17 வரை 3 நிதியாண்டு களுக்கு ரூ.1,745 கோடி வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பி யது.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் மூலம் வரு மான வரித்துறை அபராதத் தொகை ரூ.3,568 கோடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக முன்பு காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத் தில் (ரூ.1,700 கோடி அபராதம் விதிக்கப்பட்ட பொழுது தொடரப் பட்ட வழக்கு) நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் முன்பு திங்களன்று வழக்கு விசா ரணைக்கு வந்தது. தேர்தல் நேரத் தில் இந்த நடவடிக்கை தேவையா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஒன்றிய அரசு சார் பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, “காங்கிரஸ் கட்சியிலி ருந்து ரூ.1,700 கோடி வசூல் செய் வதற்கான நடவடிக்கையை தற் போது எடுக்க மாட்டோம் என்றும், வழக்கை தேர்தல் காலம் முடிந்த பிறகு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் எவ்வித கருத்தும் தெரிவிக் காத நிலையில், தேர்தல் நேரத் தில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி தரக்கூடாது என வரு மான வரித்துறைக்கு உத்தர விட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 24க்கு ஒத்திவைத்தனர்.