உலகின் மிக மோசமான பேரழிவான போபால் விஷவாயு சோகத்தால் (மத்தி யப்பிரதேசம்) பாதிக்கப்பட்டவர்களுக்காக பணி யாற்றும் 4 அமைப்புகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன. 1984இல் நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவால் 3,787 பேர் உயிரி ழந்தனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் விஷ வாயு தாக்கத்தால் நோயுற்ற நிலையில் உள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததால் “இனி வங்கதேசத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம்” என மேற்கு வங்க மாநிலம் கொல கத்தாவில் உள்ள மாணிக்தலா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வரை முடிவு செய்ய முடியாமல் மகாயுதி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் காபந்து முதல்வராக பணியாற்றி வரும் சிவசேனா தலை வர் ஏக்நாத் ஷிண்டே, மும்பையில் நடைபெற விருந்த மகாயுதி கூட்டணிக் கூட்டத்தை புறக்க ணித்து சொந்த ஊரான சதாரா டேர் கிரா மத்தில் உள்ள தனது பாரம்பரிய வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மகாயுதி கூட்டணியில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியின் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்தன.
“மகாராஷ்டிராவில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய அரசு பதவியேற்கும். முதல்வராக பட்னா விஸ் பதவியேற்பார்” என மகாராஷ்டிரா பாஜக மேலிடம் கூறியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
கோவா பாஜக முதல்வர் பிரமோத் சாவந்தின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெங்கல் புயலால் தமிழ்நாட்டில் மட்டு மின்றி ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
உத்தரப்பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி மாவட்டத் தில் சனிக்கிழமை காலை கார் - ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.
லக்னோ
வீட்டுக் காவலில் எதிர்க்கட்சித் தலைவர்கள்
சமாஜ்வாதி கண்டனம்வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியை பார்வையிட உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் மாதா பிரசாத் பாண்டே தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் நியமித்தார். அகிலேஷ் அறிவித்த உடன் எதிர்க்கட்சித் தலைவர் மாதா பிரசாத் பாண்டே வீடு மற்றும் சம்பல் ஆய்வுக்குழு வில் இடம் பெற்ற 14 பேரின் வீடுகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உத்தரப்பிரதேச காவல்துறை சிறைபிடித்தது. கிட்டத்தட்ட ஜம்மு-காஷ்மீரில் முன்பு எதிர்க்கட்சித் தலை வர்களை வீட்டுக் காவலில் வைத்தது போல சமாஜ்வாதி கட்சியினரையும், வீட்டுக் காவலில் வைத்துள்ளது உத்த ரப்பிரதேச பாஜக அரசு.
அகிலேஷ் கண்டனம்
உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த செயலுக்கு சமாஜ்வாதி தலைவர் அகி லேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், “சம்பல் செல்ல எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை பாஜக அரசின் ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியாகும். கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு கண்டு வெறித்தனமான முழக்கங்களை எழுப்பு பவர்களுக்கு அரசாங்கம் அத்தகைய தடையை முன்பே விதித்திருந்தால், சம்ப லில் உள்ள நல்லிணக்கம் மற்றும் அமைதி யின் சூழல் கெட்டுப்போயிருக்காது. உத்த ரப்பிரதேசத்தில் பாஜக தோற்றுவிட்டது” என அவர் கூறினார்.
கொல்கத்தா
“நாடாளுமன்றம் இயங்குவதை பாஜக விரும்பவில்லை
நாடாளுமன்றம் இயங்குவதை பாஜக விரும்பவில்லை என திரி ணாமுல் காங்கிரஸ் கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மஹுவா மொய்த்ரா,” எதிர்க்கட்சியின் வேலை என்ன? நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை முன் வைப் பதுதான் எதிர்க்கட்சியின் வேலை. அதற்குதான் நாடாளுமன்றம் இருக்கி றது. மணிப்பூர், சம்பல், அதானி ஊழல், விலைவாசி உயர்வு என எதிர்க்கட்சியான நாங்கள் எதை பேசக் கேட்டாலும் அவர் கள் அனுமதி மறுக்கிறார்கள். நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை இருட்ட டிப்பு செய்கிறார்கள். நாடாளுமன்ற அவைகள் இயங்க பாஜக அரசாங்கம் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.