india

img

50% அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்! - தில்லி அரசு அறிவிப்பு

தில்லியில் 50% அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தில்லி அரசு அறிவிப்பு.
தலைநகர் தில்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக காற்றின் தரக்குறியீடு 400 வரை எட்டி மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. காற்று மாசினை கட்டுப்படுத்த தில்லி அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. இந்த நிலையில், தில்லியில் 50% அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தில்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக காற்று மாசு குறைந்து இயல்பு நிலை திருப்பும் வரை தில்லியில் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது.