வயநாடு நிலச்சரிவு சம்ப வத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கல் செய்திக் குறிப்பில்,”கேரள நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்துக் கொள்கி றேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்” என இரங்கல் குறிப்பில் தெரிவித்து இருந்தார்.
இதே போல அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது இரங்கல் செய்திக் குறிப்பில்,“இந்தியாவின் கேரள மாநி லத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரி ழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரி வில் அன்புக்குரியோரை இழந்துவா டும் குடும்பங்களுக்கு எனது பிரார்த்த னைகள். பேரிடரின் போது மீட்புப் பணி களில் ஈடுபடும் வீரர்களின் தைரி யத்திற்கு பாராட்டுகள்” என்று தெரி வித்துள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன், விளாடிமிர் புடின் ஆகிய இருவர்களின் இரங்கல் குறிப்புச் செய்தியை வெளி யிட்ட பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள், பிரதமர் மோடியின் படத் தையும் சேர்த்து பதிவிட்டு தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது ஜோ பைடன், விளாடிமிர் புடின் படத்துடன், பிரதமர் மோடி வணக்கம் வைத்த படத்தையும் சேர்த்து “கோடி மீடியா” ஊடகங்கள் தங்களது செய்தி தொகுப்பை வெளி யிட்டுள்ளன. இரங்கல் செய்தியில் கூட ஆதாயம் தேடும் பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கும் “கோடி மீடியா” ஊடகங்களின் இழிவான அர சியலுக்கு கண்டனங்கள் குவிந்து வரு கின்றன.