பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பான் கார்டு எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேன் எண்ணை இணைக்கும் முறைகள்
https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற லிங்கில் சென்று பான் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளதா என்பதை சோதனை செய்யலாம்.
Income Tax e-filing வெப்சைட்டுக்கு நீங்கள் முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் அங்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
ஓடிபி வெரிஃபிகேஷன் நிறைவடைந்த பிறகு பான் கார்டு விவரங்களை கொடுத்து பாஸ்வேர்டு உருவாக்கி லாக்-இன் செய்யவும்.
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு அதில் ஆதாரை இணைப்பதற்கான லிங்க் இந்தப் பக்கத்தின் இடதுபுறத்தில் இருக்கும்.
அதில் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
பின் லிங்க் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது உங்களின் இரண்டு ஆவணங்களும் இணைக்கப்பட்டுவிடும்.
செல்போன் வழியாக இணைக்க
UIDPAN என டைப் செய்து உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை பதிவிட்டு 56161 or 567678 என்ற எண்ணுக்கு எஸ். எம்.எஸ் செய்யவும். உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருந்தால் அந்த ஆவணங்கள் தாமாக இணைக்கப்பட்டு விடும்.