பாஜக ஆளும் திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள கந்தசெரா கிராமத்தில் கடந்த ஜூலை 6 அன்று கண்காட்சி ஒன்று நடை பெற்றது. இந்த கண்காட்சி நிகழ்வில் உள்ளூர் மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். 2 நாட்க ளாக தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த மோதலில் ஜூலை 7 அன்று பரமேஸ்வர் ரியாங் என்ற இளைஞன் கொல்லப்பட்டார். இதனை யடுத்து இளைஞரின் உறவினர்கள், இந்த படுகொலைக்கு நீதி கேட்டு வெள்ளி யன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், இந்த வன்முறையில் ஏராள மான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டி ருக்கிறது. பொதுமக்கள் பலர் தாக்கு தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலாய் மாவட்டத்தில் இணையசேவை துண்டிக் கப்பட்டு, 144 தடை உத்தரவும் பிறப் பிக்கப்பட்டுள்ளது.