india

நூற்றுக்கணக்கான கார்ப்பரேட் நிறுவன இயக்குநர்கள் குழுவில் ஒரு பெண் நிர்வாகி கூட இல்லை

புதுதில்லி, பிப்.9-
பாலின சமத்துவத்திற்கான சட்ட விதிகளை மீறியும், இயக்குநர்கள் குழுவில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காமலும் செயல்படும் நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நிறுவனச் சட்டப் பிரிவு 149 கூறுவது என்ன?
2013 கம்பெனிகள் சட்டத்தின் பிரிவு 149-இன்படி 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்ட மூல தனம் அல்லது 300 கோடி ரூபாய் குறைந்த பட்ச வர்த்தகம் நடைபெறும் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் (Board of Directors), ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும். 

பாலின சமத்துவ நடவடிக்கையாக அறி விக்கப்பட்ட இந்த அம்சம், எந்த அளவுக்கு நடை முறைப்படுத்தப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்கள வை உறுப்பினர் சு. வெங்கடேசன், நாடாளு மன்றத்தில் கேள்வி (எண் 27/ 05.02.2024) எழுப்பியிருந்தார்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பதிலளித்துள்ளார். அதில், நூற்றுக் கணக்கான நிறுவனங்கள், பாலின சமத்துவப் பார்வை இன்றி, பெண் இயக்குநர் சம்பந்தமான விதிகளை அப்பட்டமாக மீறி யிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

குறிப்பாக, 2016 முதல் 2024 வரையிலான காலத்தில் பெண் இயக்குநர்களை கொண்டி ருக்காத 81 நிறுவனங்களிடம் தண்டத் தொகை யாக மட்டும் ரூ. 1 கோடியே 41 லட்சம் விதிக் கப்பட்டுள்ளது. 2018-இல் இருந்து ‘செபி’ அமைப்பு விதிகளின்படி தில்லி, மும்பை  பங்குச்சந்தைகள் விதித்துள்ள தண்டத்தொகை விவரங்களை சேர்த்தால், 2019 முதல் 2024 வரை யிலான காலத்தில் 432 கம்பெனிகள் மீது 25 கோடி ரூபாய் தண்டம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

விதி மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும்!
ஒன்றிய நிதியமைச்சர் அளித்துள்ள இந்த பதிலை அறிக்கையாக வெளியிட்டுள்ள சு. வெங்கடேசன் எம்.பி., பாலின சமத்துவ விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார்.

“நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் எந்த அளவுக்கு சட்ட மீறல்களில் ஈடுபடுகிறார்கள், ஒரு பெண் இயக்குநர் கூட இல்லாமல் நிறு வனங்களை நடத்துகிறார்கள், பாலின சமத்து வம் குறித்த அக்கறை இன்றி செயல்படு கிறார்கள் என்பதை ஒன்றிய நிதியமைச்சர் அளித்துள்ள பதில் அம்பலப்படுத்துகிறது. 

10 ஆண்டுகளாக மீறல்கள்  தொடர காரணம் என்ன?
பாலின சமத்துவத்திற்கான சட்டம் வந்து 10 ஆண்டுகள் ஆகியும், ‘செபி’ விதிமுறை கள் வந்து 6 ஆண்டுகள் ஆகியும் நூற்றுக்கணக் கான கம்பெனிகள் மீறல்களை தொடர்வ தற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். 

முதலாவதாக தண்டத்தொகை மிகக் குறை வாக உள்ளது. 100 கோடி ரூபாய் மூலதனம், 300 கோடி ரூபாய் வர்த்தகம் உள்ள நிறுவனங்கள் ரூ. 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை தண்டத்தொகை யை கட்டிவிட்டு தப்பித்துக் கொள்வது எளி தாக உள்ளது. இரண்டாவது, இயக்குநர் நிய மனங்களில் அரங்கேறும் மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்று, 2020-இல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமும் இத்த கைய துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கலாம். 

அரசியல் உறுதிமிக்க  மாற்றங்கள் தேவை
ஆகவே, அரசியல் உறுதியோடு சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக் கும் வகையிலான மாற்றங்களை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும்” என்று சு. வெங்கடே சன் குறிப்பிட்டுள்ளார்.