பொது விநியோக ஊழலில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பொது விநியோக ஊழல் குறித்து நேற்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதற்கு பதிலளித்த நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் ரோசாஹேப் டான்வே பாட்டீல், இது குறித்து தகவல்களை வெளியிட்டார். அதன்படி, பொது விநியோக முறையில் கடந்த அக்டோபர் 31-ஆம் வரை 807 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பொது விநியோக ஊழலில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 328 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் 108 ஊழல் புகார்களும், தில்லியில் 78 ஊழல் புகார்களும், மேற்கு வங்காளம் மாநிலத்தில் 48 ஊழல் புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.