india

img

7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும்

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில் “இந்தியா” கூட்டணி யின் வளர்ச்சியால் பாஜக திக்கு முக்காடி வருகிறது. தோல்வி பயத்  தால் அமலாக்கத்துறை உள்ளிட்ட  மத்திய அமைப்புகளை வைத்து  “இந்தியா” கூட்டணி தலைவர் களை மோடி அரசு மிரட்டி வரு கிறது. பீகாரில் நிதிஷ் குமாரை தங்கள் கூட்டணிக்கு அழைத்துச் சென்று விட்டது. அடுத்ததாக குடி யுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மூலம் நாட்டில் வன்முறையை கிளப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங் கும் பெரும் போராட்டங்கள் நடந் ததால் கிடப்பில் போடப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்  டத்தை அமல்படுத்தியே தீரு வோம் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அடிக்கடி கூறி வந்தார்.  இந்நிலையில், ஞாயிறன்று மேற்கு  வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா வில், ஒன்றிய கப்பல் போக்கு வரத்து துறை அமைச்சர் சாந்தனு  தாக்கூர்,”அடுத்த 7 நாள்களுக் குள் குடியுரிமை திருத்தச் சட்டம்  (சிஏஏ) நாடு முழுவதும் அமல்படுத்  தப்படும்” என வெளிப்படையா கவே அறிவித்து சர்ச்சையை ஏற்  படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளது. அத னால் அடுத்த 7 நாள்களுக்குள் நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்  படுத்தப்படும். இது எனது உத்தர வாதம். மேற்கு வங்கத்தில் மட்டு மின்றி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே வாரத்துக்குள் சிஏஏ அமல்படுத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டமானது, வங்கதேசம், பாகிஸ் தான், ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்த இந்துக்  கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்த வர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது என்  பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்டில் யுசிசி

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக இருக்கும்  புஷ்கர் சிங் தாமி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. வரும் கூட்டத்தொடரில் யுசிசி மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்று கூறியுள்ளார். உத்தரகண்ட்டில் பிப்ரவரி 5 முதல் 8 வரை 4 நாட்கள் சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்த பொது சிவில் சட்ட மசோதா விவாதத்திற்கு வைக்கப்படுவதாகவும் தக வல் வெளியாகியுள்ளது.