யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் இணையத்தில் வெளியான விவகாரம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் ஆகிய பணிகளில் சேருவதற்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைதான் இத்தேர்வையும் நடத்துகிறது. இந்த ஆண்டும் யுஜிசி நெட் தேர்வு கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. 9.08 லட்சம் பேர் தேர்வெழுதினர். யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் இணையத்தில் வெளியாகி முறைகேடு நடந்தது அம்பலமாகி உள்ளது. இதை அடுத்து, இந்த நெட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.