india

img

இந்தியாவில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி 

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து வரும் நிலையில் பிரிட்டனில் வேகமாக பரவிவரும் உருமாறிய கொரோனா தொற்று காரணமான , டிசம்பர் 31 ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியவா்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பவா்கள் எனக் கண்டறியப்பட்டவா்களுக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை இந்தியா வந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்தது.
இந்நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் முகக் கவசங்களை அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும், தனிநபா் சுகாதாரத்தையும் பின்பற்றினால் போதுமானது. கொரோனா தொற்றுக்கு கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசி  உருமாறிய தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இது தொடா்பாக மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

;