ஒன்றிய அரசாங்கத்தின் தொழி லாளர் விரோத - விவசாயிகள் விரோத - நாசகர தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து, பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு நடத்திட சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்கள் இணைந்து அறைகூவல் விடுத்துள் ளன.
இதுதொடர்பாக இவ்விரு அமைப்புகளும் புதுதில்லியில் ஜனவரி 17 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சம்யுக்த கிசான் மோர்ச்சாவும், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையும் 2023 ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற கூட்டு இயக்கத்தை ஆய்வு செய்தன.
தற்போது ஆட்சி யில் உள்ள ஒன்றிய மதவெறி அர சாங்கம், கார்ப்பரேட்டுகளுடன் கூட்டுக் களவாணித்தனம் செய்து, நாட்டின் சொத்துக்களை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில தனி யார் கார்ப்பரேட்டுகளிடம் வெட்கக் கேடான முறையில் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தில் இயங்கி டும் நிறுவனங்கள் அனைத்தை யும் செயலற்றதாக்கி, மேற்படி கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டு கள் கைப்பற்றிக் கொண்டிருக் கின்றார்கள்.
விவசாயிகள் - தொழிலாளர்களை நசுக்கும் ஒன்றிய பாஜக அரசு
ஒன்றிய மதவெறி அரசாங்கம், தொடர்ந்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பின் பற்றிக் கொண்டிருக்கிறது. மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகளை அர சமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மறுத்து வருகிறது. அனைத்துப் பிரிவு மக்களின் ஜனநாயகக் கோரி க்கைகளையும், தங்கள் கட்சிக்கு எதி ராகக் குரல் எழுப்பிடும் அனைத்துத் தரப்பினரையும் நசுக்கிக் கொண்டி ருக்கிறது. அரசியலிலும், அரச மைப்புச்சட்ட நிறுவனங்களிலும் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங் கும் புலனாய்வு அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்து, மத வெறி நஞ்சை மிகவும் ஆபத்தான முறையில் செலுத்திக்கொண்டிருப் பது தொடர்கிறது.
கயவர்களைப் பாதுகாக்கும் கூச்சமே இல்லாத நடவடிக்கை
ஒன்றிய அரசாங்கம் ஊடகங் களின் சுதந்திரத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட கய வர்களைப் பாதுகாத்திடவும் எவ்வித கூச்சமும் இன்றி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஏற்கென வே எண்ணற்ற போராட்டங்களில் ஈடு பட்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான் தொழிலாளர்களும், விவசாயி களும் ஒன்றுபட்டு நின்று மதவெறி அரசு - கூட்டுக்களவாணி கார்ப்ப ரேட்டுகளின் கூட்டணியை முறி யடித்திட வேண்டிய வரலாற்றுக் கடமையை ஆற்றிட மீண்டும் உறுதியேற்கின்றனர்.
அதனடிப்படையில், 2020 நவம்ப ரிலிருந்து இவ்விரு இயக்கங்களும் தொடர் நடவடிக்கைகளை மேற் கொண்டனர். குறிப்பாக இதுதொடர் பாக ஜனவரி 10 முதல் 20 வரை யிலும் தொழிலாளர்களும் விவசாயி களும் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை
அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் கட்டுப்படி யாகும் விலை + உற்பத்திச் செல வினத்துடன் 50 விழுக்காடு உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யம் செய்திட வேண்டும்; சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திட வேண்டும்; தொழிலா ளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்; தொழிலா ளர்களுக்குக் கேடு பயக்கும் நான்கு லேபர் சட்டப்பரிவு (Labour Codes)களையும் ரத்து செய்திட வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டத்திலும், குற்றவிசாரணை முறைச் சட்டத்தி லும் அரக்கத்தனமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங் களை ரத்துசெய்திட வேண்டும்.
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்குக!
உத்தரவாதமான வேலை வாய்ப்பை அடிப்படை உரிமை யாக்க வேண்டும்; ரயில்வே, ராணு வத்துறை, மின்சாரம், நிலக்கரி, எண்ணெய், உருக்கு, டெலிகாம், அஞ்சல், போக்குவரத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் உட்பட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக்கூடாது. கல்வி, சுகாதாரத்துறையை தனியார்மய மாக்கக் கூடாது; வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கக் கூடாது; குறுகிய கால வேலை வாய்ப்பை ரத்துசெய்ய வேண்டும்; 200 நாட்களுடன் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்; இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். முறைசாராத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; அனைத்து முறைசாராத் தொழிலாளர்கள் அமைப்புகளுக்கும் நல வாரியங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து துண்டறிக்கைகள், கோரிக்கை சாசனங்களை வழங்கினர்.
மக்களைக் கூறுபோடும் மதவெறி நிகழ்ச்சிநிரலை எதிர்த்திடுவோம்; அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப் பட்டுள்ள ஜனநாயகம், கூட்டாட்சித்தத்துவம், மதச்சார் பின்மை மற்றும் சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கை களைப் பாதுகாத்திடுவோம் என்றும் சூளுரைத்தனர்.
மாவட்ட தலைநகர்களில் ஜன. 26 -இல் டிராக்டர் பேரணி
இதன் நிறைவாக, மேற்கொண்ட கோரிக்கைகளை முன்வைத்து, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் 2024 ஜனவரி 26 அன்று மாவட்டத் தலைநகர்களில் டிராக்டர்/வாக னங்கள் பேரணி நடத்திட அறைகூவல் விடுக்கின்றன.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்கள் பெரும் திரளாகப் பங்கேற்று, எதேச்சதிகார ஆட்சியின் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை முறியடித்திட வேண்டும்.
மக்களைப் பாதுகாத்திட, ஜனநாயகத்தைப் பாதுகாத்திட, நாட்டைப் பாதுகாத்திட நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் ஆதர வினை அளித்திட வேண்டும். இவ்வாறு சம்யுக்த கிசான் மோர்ச்சாவும், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும் தங்கள் அறிக்கை யில் அறைகூவல் விடுத்துள்ளனர். (ந.நி.)