வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியதாவது:
“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை;
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை!
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? இலங்கை அரசிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது.
ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ₹2000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை.
சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.