சென்னை, பிப்.10- “ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக -ஆர்எஸ்எஸ் நடைமுறைப்படுத்தத் துடிக்கும் இந்துத்துவ பிராமணிய மநு வாதத் தத்துவமானது, சாதிமுறையைக் காலாகாலத்திற்கும் நீட்டிக்கச் செய்ய போதிப்பதாகும். நீண்ட நெடிய சமூக சீர்திருத்தப் போராட்டங்களால் வென்றெ டுக்கப்பட்ட அத்தனை சமூக முன்னேற் றங்களையும் புரட்டிப்போட்டு சமூகத்தை முந்தைய காலங்களுக்குத் திருப்பிக் கொண்டு போகும், அவர்களது தத்து வத்தை முறியடிக்காமல் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவு கட்ட முடியாது. அதே வேளையில் வர்க்க சுரண்டலுக்கு எதிரான போரையும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போரையும் பிரிக்காது ஒருமித்து ஒரே காலத்தில் முன்னெடுக்க வேண்டும்” என்றார் மார்க்சிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிரகாஷ் காரத்.
போராட்டக் கள அனுபவங்கள் மிகவும் முக்கியமானவை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் எழு திய ‘சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்: கள அனுபவங்கள்’ நூலை வெள்ளியன்று (பிப்.9) சென்னை யில் வெளியிட்டுப் பேசிய பிரகாஷ் காரத், “இந்தப் புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் நிலவும் தீண்டாமை யின் பல்வேறு வடிவங்கள், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன் கொடுமைகள் இவற்றையெல்லாம் ஆவ ணப்படுத்தியுள்ள இந்தப் புத்தகம் விரை வில் ஆங்கிலத்திலும் வரவேண்டும், அப்படியே இந்திய மொழிகள் பல வற்றிலும் கொண்டு செல்லப்பட வேண் டும், ஏனெனில் நாடு நெடுகிலும் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன, அவற்றுக்கு எதிரான போராட்டக் கள அனுபவங்கள் இன்று மிகவும் முக்கியமா னவை ஆகும்” என்றார் காரத்.
சாதிய ஒடுக்குமுறை குறித்த கள நிரூபணமே இந்த நூல்
“சாதிய இழிவு, தீண்டாமை வன் கொடுமைகள் பற்றிச் சொல்லும் போதெல்லாம் மிகவும் அறிவார்ந்த பகுதி மக்கள் கூட, ‘இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை’ என்று அடித்துப் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், கள ஆய்வு கள் மூலம் மறுக்க முடியாத உண்மை களின் அப்பட்டமான சாட்சியமாக, நிரூ பணமாக இந்தப் புத்தகம் அனைத்து வித ஒடுக்குமுறைகளையும் ஆவணப் படுத்தி உள்ளது” என்று பாராட்டிய காரத், “ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மதிப்பு மிக்க களப் போராட்டங்களின் பதிவு இந்தப் புத்தகம்” என்றார்.
“தமிழில் உள்ளதால் புத்தகத்தைத் தன்னால் வாசிக்க இயலாது, போனா லும், அதன் சாராம்சம் ஆங்கிலத்தில் தனக்குத் தரப்பட்டது” என்று குறிப்பிட்ட காரத், கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த காலம்தொட்டு, தான் மேற்கொண்ட ஒடுக்குமுறை களுக்கு எதிரான போராட்டங்களை சம்பத் விவரித்துத் தொகுத்துள்ளார், ஆலய நுழைவு மறுக்கப்பட்ட தலித் மக்க ளுக்கு ஆலய நுழைவு கோரி மேற் கொள்ளப்பட்ட போராட்டங்கள் தொடங்கி தலித் மக்களுக்கு எதிரான கொடிய வன்கொடுமைகளுக்கு எதி ரான பல்வேறு போராட்டங்களையும் புத்தகம் பதிவு செய்துள்ளது” என்றார்.
உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்க்கும் போராட்டத்தில் பங்கேற்கத் தானும் அங்கே போராளிகளோடு சென் றதை நினைவு கூர்ந்த காரத், “மாவட்ட நிர்வாகம் முந்தைய நாளே சுவரின் ஒரு பகுதியை இடித்து விடும் நிர்ப்பந்தத்தை நம் போராட்டங்கள் ஏற்படுத்தியது, காவல் துறையின் கடுமையான நடவ டிக்கைகளையும் எதிர்கொண்டு போராட் டங்களை நடத்தியவர் சம்பத்” என்று பாராட்டினார்.
சுரண்டல் நீடிப்பதற்கு துணைபோகும் சாதியம்
“போராட்டங்களை மட்டும் சொல்லிக் கொண்டு போகவில்லை, கடைசி அத்தியாயங்களில், சாதிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறியும் வழி என்ன, என்பதையும் விளக்கி இருக்கிறார் சம்பத்” என்று குறிப் பிட்ட காரத், “சாதியம் என்பது ஏதோ ஒரு நம்பிக்கை அல்லது உணர்வு என்பது அல்ல, சமூகக் கட்டுமானத் தின் பகுதி என்று மார்க்சிஸ்டுகள் தெளிவாக நம்புகிறோம். முதலா ளித்துவ உற்பத்தி முறை ஏற்பட்ட பிறகும் கூட சாதிய ஒடுக்குமுறைகள் இல்லாது போகவில்லை, மாறாக, மலிவான முறையில் சுரண்டலைத் தொடர்வதற்கு சாதியம் பயன் படுத்தப்படுகிறது” என்று சுட்டிக் காட்டிய காரத், “வர்க்கச் சுரண்டலுக் கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் என்பது ஒன்றோ டொன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்தது” என்றார்.
“சாதியில் கீழ்நிலையில் இருப்ப வர் கூடத் தனக்கும் கீழான படிநிலை யில் இருப்பவரை ஒடுக்க நினைக்கி றார். வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை மட்டும் முன்னெ டுத்தால், சாதிய முறைமை கால காலத்திற்கும் தொடரும், அதே போல், சாதிய ஒடுக்குமுறைக்கு எதி ரான போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டிருந்தால் வர்க்க சுரண்டல் இன்னும் தீவிரமாகும். இரண்டுக்கும் எதிரான போராட்டங்களை ஒரே நேரத்தில் ஒருமித்து நடத்த வேண்டும்” என்றார் அவர்.
வர்க்கச் சுரண்டலோடு வருண ஒடுக்குமுறையை அமல்படுத்தும் ஆர்எஸ்எஸ்- பாஜக
“மநுவாத வருணாசிரம கோட் பாட்டை உட்கொண்டு இந்துத்துவ பிராமணீய ஆதிக்க உணர்வோடு ஆட்சியைச் செலுத்தும் பாஜக - ஆர்எஸ்எஸ், ‘தேச பக்தி’ என்ற போர்வையில் மத ரீதியான உணர் வைத் தூண்டி மக்களைப் பிரித்து உழைப்பாளி மக்களது உரிமைகளை ஒடுக்க முனைந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் தொடக்க பூசைகளின் போது ஒரு தலித்திடம் செங்கல் வாங்கி, ஏதோ தாங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் விரும்பி கள் போல் ஓர் அடையாளப்பூர்வ வேலையைச் செய்து மக்களை ஏமாற்ற முனைந்தவர்கள் இவர்கள். இன்னொரு புறம் கார்ப்பரேட் ஆதர வுக் கொள்கைகளால் மக்களைப் பொருளாதார ரீதியிலும் வஞ்சித்து வருகின்றனர். எனவேதான், நாம் வர்க்க சுரண்டலுக்கும், வருணாசிரம சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களை ஒருமித்தும், ஒரே காலத்திலும் மேற்கொள்ள வேண்டும் என்கிறோம்” என்றார்.
தமிழக போராட்டப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!
“தமிழக வரலாற்றில் நூறாண்டு களுக்கு மேலாக சமூக சீர்திருத்த வாதிகள் சாதிய ஒடுக்குமுறைக ளுக்கு எதிராக ஆற்றிய ஏராளமான பங்களிப்பு உண்டு. சாதி முறை களுக்கு எதிராகவும், சாதிய வன் கொடுமைகளுக்கும் எதிரான மகத்தான போராட்டங்கள் நடந்தன. திராவிட இயக்கத்திற்கு அதில் முக்கிய பாத்திரமிருந்தது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வலு வான போராட்டங்களை முன்னெ டுக்க வேண்டிய காலம் இது” என்றார் காரத்.
‘சாதிகளை ஒழித்தல்’ என்ற முக்கியமான கருத்தாக்கத்தை டாக்டர் அம்பேத்கர் முன்னெடுத்தார், அந்த நெடிய போராட்டத்தை நடத்த, வர்க்கச் சுரண்டல், சாதி ஒடுக்கு முறை- இரண்டுக்கும் எதிராக ஒரு மித்த ஒரே நேரத்தில் போராட்டங்க ளை நாம் தொடர்ந்து மேற்கொள் வோம் என்றார். இத்தகைய போராட்டங்களுக்கும், வலதுசாரி பிற்போக்கு மதவெறி அரசியலுக்கு எதிராக மக்களிடத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சம்பத் அவர்களது புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்” என்று பாராட்டினார்.