புதுதில்லி, ஜன. 24 - அசாமில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை கார்கே அனுப்பி யுள்ளார்.
“அசாம் போலீசார் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளை யத்தை பாஜக தொண்டர்கள் உடைத்து நெருங்க அனுமதிக்கின்றனர் அல்லது மீறல்களை கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர். ராகுலுக்கும் அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். அசாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறுஇடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வரு கின்றன. அத்துனை இடையூறு களுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்ட மிட்டபடி யாத்திரையை மேற்கொண் டுள்ளார்.
அதனால் நீங்கள் தலையிட்டு அசாம் முதல்வரும், காவல்துறை டிஜிபி-யும் ராகுல்காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஏதும் அசம்பா வித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் இதில் தலையிட்டு அவருடைய, யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”என்று கடிதத் தில் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அசா மில் ராகுலின் யாத்திரை மீது பாஜக- வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன், பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நேரடியாக தலையிட்டு, ராகுலின் யாத்திரைக்கு தடை விதித்தும், ராகுல் மீது வழக்கு பதிவு செய்தும் அடக்குமுறையில் ஈடு பட்டு வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.