ஒன்றிய பாஜக அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கண்டித்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் குடிசைவாசிகளின் மிகப்பெரிய அமைப்பான பஸ்தி உன்னயன் சமிதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியது. சிபிஐ(எம்) ஊழியர்கள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் திரளாக கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ஹன்னன் முல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா, சம்மிலிதா பஸ்துஹாரா பரிஷத் மாநிலச் செயலாளர் மது தத்தா, மேற்கு வங்க பஸ்தி உன்னயன் சமிதியின் பொதுச் செயலாளர் சுகரஞ்சன் தே ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.