18ஆவது மக்களவை தேர்த லில் 42 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளி லும், பாஜக 12 தொகுதிகளிலும், காங் கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது. மேற்கு வங்கத்தில் கடந்த 2019 மக்க ளவைத் தேர்தலில் 18 தொகுதிகளை வென்ற பாஜக, இம்முறை 6 இடங் களை இழந்து 12 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. இது பாஜகவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த கட்சிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மக்களவை தேர்தல் முடிவால் மேற்கு வங்க மாநில பாஜக வினர் கடும் அதிருப்தியில் உள்ள தாகவும், பாஜக சார்பில் வெற்றி பெற்ற 12 எம்.பி.க்களில் 4 முதல் 5 எம்.பி.க்கள் தங்களின் தொடர்பில் இருப்பதாக திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி 10 நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இதனை பாஜக மறுத்த நிலையில், செவ்வாயன்று மேற்குவங்க பாஜக மூத்த தலைவ ரும், மாநிலங்களவை எம்பியுமான நாகென் ராய் மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜியை நேரில் சந் தித்தார். மேற்குவங்க அரசின் கூச் பிகார் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு?
வங்கதேசம் - மேகாலயா எல்லையில் உள்ளது கூச்பிகார் மக்களவைத் தொகுதி. இந்த தொகு தியில் ராஜ்பன்ஷி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் நிலையில், கூச்பிகா ரில் பாஜக 40,000 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் ராஜ்பன்ஷி சமூ கத்தின் முக்கிய தலைவரும், மாநி லங்களவை எம்.பி.யுமான நாகென் ராய் கடும் அதிருப்தியில் உள்ள தாக தகவல் வெளியானது. இந்த தக வல் வெளியாகி 5 நாட்கள் கூட ஆகாத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து அரை மணிநேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில், “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். பொறுங்கள்” என நாகென் ராய் மழுப்பலாக கூறி யுள்ளார்.
கலக்கத்தில் பாஜக
அபிஷேக் பானர்ஜியின் பேச்சு, நாகென் ராய் - மம்தா பானர்ஜியின் சந்திப்பு, நாகென் ராயின் செய்தி யாளர்கள் சந்திப்பு பேச்சு உள்ளிட்ட வைகள் பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வட கிழக்கு மேற்கு வங்க பிராந்தியத்தில் நாகென் ராய் முக்கிய தலைவராக உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடகிழக்கு மேற்கு வங்க பிராந்தியத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. கூச்பிகார் மக்களவைத் தொகுதி மட்டுமே திரி ணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், வடகிழக்கு மேற்கு வங்க பிராந்தியத்தின் முக்கிய தலை வரான நாகென் ராய் திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தால் அவரு டன் 5க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவருடன் செல்ல வாய்ப்புள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம் கார ணமாக மேற்கு வங்கத்தில் பாஜக இரண்டாக உடையலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியாகியுள் ளது. இது நடந்தால் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியின் பெரும் பான்மை வெகுவாக குறையும் என் பது குறிப்பிடத்தக்கது.