india

img

ஷம்பு எல்லையில் மோடி அரசுக்கு எதிரான போராட்டம் 200 நாளை கடந்தது

புதுதில்லி குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அமல் படுத்தக் கோரி பஞ்சாப், ஹரியா னா, சண்டிகர், உத்தரப்பிரதேச மாநி லங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்றாக திரண்டு, இரண்டாம் கட்ட மாக தில்லிக்குள் நுழைந்து போ ராட்டம் நடத்த தில்லி - ஹரியானா எல்லையில் டிராக்டர்களுடன் விவ சாயிகள் அணிவகுத்தனர். விவ சாயிகளின் போராட்டத்தைக் கண்டு  அஞ்சிய மோடி அரசு, தனது கட்டுப் பாட்டில் உள்ள தில்லி காவல் துறை, துணை ராணுவப்படை மற்றும் பாஜக ஆளும் ஹரியானா மாநில காவல்துறையின் உதவி யுடன் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது.

மோடி அரசின் இந்த கோழைத் தனமான தாக்குதலில் இளம் விவசாயி உட்பட 4க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலை யில், 300க்கும் மேற்பட்ட விவசாயி கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மோடி அரசின் தாக்குதலால் படுகா யமடைந்த விவசாயிகள் இன்னும் இயல்புநிலை திரும்பாமல் இருப்ப தால், தில்லியில் போராட்டம் நடத் தும் முடிவை கைவிட்டு ஷம்பு எல்லையில் (தில்லி - ஹரியானா எல்லை) ஆயிரக்கணக்கான விவ சாயிகள் தொடர்ந்து முகாமிட்டுள் ளனர். 

இந்நிலையில், ஷம்பு எல்லை யில் நடைபெற்று வரும் விவசாயி கள் போராட்டம் ஆகஸ்ட் 31 அன்று டன் (சனிக்கிழமை) 200 நாட்க ளை கடந்துள்ள நிலையில், இந் நிகழ்வை விவசாயிகள் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

நாடு முன்னேறாது : வினேஷ் போகத்

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் 200ஆவது நாள் கொண்டாட்டத்தில் அரசியல் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார். வினேஷ் போகத்திற்கு மாலை அணிவித்து விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஷம்பு எல்லையில் விவசாயிகள் முன்பு உரையாற்றிய வினேஷ் போகத்,“உங்களுடைய போராட்டம் இன்று 200 நாளை நிறைவு செய்கிறது. உங்கள் நீதிக்காக, உரிமைக்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறாள் என்பதை நான்  சொல்லிக்கொள்ள விரும்புகி றேன். நீங்கள் இங்கே உட்கார்ந்து 200 நாட்கள் ஆகிவிட்டன. இதைப் பார்க்கும்போது எனக்கு வேதனை யாக இருக்கிறது. விவசாயிகள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். விவசாயிகள்தான் நாட்டையே வழிநடத்துகிறார்கள். விவசாயிகள் இல்லாமல் நாட்டில் எதுவும் சாத்தியமில்லை. விவசா யிகள் உணவளிக்கவில்லை என்றால் விளையாட்டு வீரர் - வீராங்க னைகள் ஆகிய நாங்கள் போட்டி யில் களமிறங்க முடியாது. 

அதேபோல இந்த நாட்டின் குடி மக்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது குரல்களை உயர்த்து வது அரசியலுக்காக இல்லை  என்பதை அரசுக்கு வலியுறுத்து கிறேன். குறிப்பாக விவசாயிக ளின் கோரிக்கை சட்டவிரோத மானது இல்லை. அரசு அவற்றை காதுகொடுத்து கேட்க வேண்டும். இவ்வளவு பெரிய அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விவசாயிகள் சோகமாக இங்கு போராடுவதை காண்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. விவசாயிகள் இப்படி தெருவில் அமர்ந்தால் நாடு முன்னேறாது” என கம்பீரமாக பேசினார். 

விவசாயிகளின் மகள் விவசாயிகளுடன் நிற்பாள்

தொடர்ந்து எஸ்கேஎம் விவ சாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் பந்தர் கூறுகையில்,”போராட்டம் அமை தியான முறையில் அதேநேரத் தில் தீவிரமாகவும் நடந்து வரு கிறது. எங்களின் கோரிக்கை கள் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. ஒன்றிய அரசு எங்களின் உறுதியை சோதிக்கிறது. காற்று, மழை, குளிர் அனைத்தையும் மீறி நாங்கள் 200 நாட்கள் அமைதி யான முறையில் இங்கே போராடி வருகிறோம். எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. வினேஷ் போகத் இங்கே வந்திருக்கிறார். நாங்கள் அவரை வாழ்த்தினோம். விவசாயிகளின் மகள் விவசாயி களுடன் நிற்பாள்” என அவர் கூறினார்.