2024இல் முன்னாள் பிர தமர்கள் பி.வி.நர சிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சனியன்று தில்லி யில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருதுகளை வழங்கினார். அதன்படி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாத னுக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகள் நித்யா ராவ் பெற் றுக்கொண்டார்.
இதேபோல முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கான விருதை அவரது மகன் பிரபாகர் ராவும், முன் னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக் கான விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூரும், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கான விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங்கும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வயோதிகம் காரணமாக விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்க வில்லை என தகவல் வெளியாகி யுள்ளது.