உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநில கட்சிகளில் ஒன்றான ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) தொடக்கத்தில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகித்தது. “இந்தியா” கூட்டணியின் எழுச்சியால் தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக, அப்பொழுது ஆர்எல்டி கட்சியை வளைக்க ஜெயந்த் சவுத்ரியின் தாத்தாவும், முன்னாள் பிரத மருமான சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருதை அறிவித்தது. பாரத ரத்னா விருது மற்றும் மோடி அரசின் மிரட்டலுக்கு அஞ் சிய ஜெயந்த் சவுத்ரி கடந்த பிப்ரவரி மாதம் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணிக்கு ஓட்டம் பிடித்தார்.
பாஜக கூட்டணியில் இணைந்ததற்கு ஆர்எல்டி கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்எல்டி கிழக்கு உத்தரப்பிர தேச பிரிவு தனியாக உடைந்து ராகுல் காந்தி யின் “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில்” பங்கேற்றது. மேலும் ஆர்எல்டி நிர்வாகி கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கா னோர் சத்தமில்லாமல் காங்கிரஸ், சமாஜ் வாதி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி பக்கம் சாய்ந்தனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எல்டி கட்சியின் தேசிய துணைத் தலை வரும், ஜெயந்த் சவுத்ரிக்கு மிக நெருக்க மானவருமான ஷாகித் சித்திக் தனது பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை திங்களன்று ராஜினாமா செய் தார். ராஜினாமா செய்த பின் தனது டுவிட் டர் எக்ஸ் பக்கத்தில்,”ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) உறுப்பினர் பதவியிலி ருந்தும், தேசிய துணைத் தலைவர் பதவி யிலிருந்தும் விலகிவிட்டேன். இதற்கான ராஜினாமா கடிதத்தை தேசியத் தலைவர் ஜெயந்த் சிங்குக்கு அனுப்பினேன். இன்று இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, அமைதியாக இருப்பது பாவம்” எனக் கூறினார்.