india

துணை சபாநாயகர் இல்லாமலேயே முடிவடையப் போகும் 17- ஆவது மக்களவை

பொதுவாக மக்களவையில் துணைசபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரே இருப்பார். கடந்த நான்காண்டுகளாக மக்களவையில் துணை சபாநாயகர் இல்லை. துணை சபாநாயகர் இல்லாமல், துணை சபாநாயகரைத் தேர்வு செய்யாமல் ஜனநாயகத்தை படுகொலை செய்து தனது ஆயுளை முடிக்க உள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. துணை சபாநாயகர் தேர்வு  செய்யப்படாதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது  என சுட்டிக்காட்டியும் அதைப்பற்றி துளியும் கவலைப்பட வில்லை பிரதமர் மோடி.

உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி முதல் மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாகவே உள்ளது.

மக்களவையில் மட்டுமல்ல பல மாநில சட்டசபைகளில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படாதது குறித்து உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. ​உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி  பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பான மனுவை விசாரித்த போது, ​​ஒன்றிய அரசு மற்றும் இராஜஸ்தான், மத்தியப்பிர தேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சட்டப்பிரிவு 93 மற்றும் 178-ஐ மேற்கோள் காட்டிய உச்சநீதி மன்ற அமர்வு துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பது கட்டா யம் என்பதை ஒன்றிய அரசுக்கு நினைவூட்டியதோடு துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்காதது குறித்து விளக்கமளிக்கு மாறும் கேட்டது.

ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் துணை சபாநாயகர் பதவி வகிப்பதை பாரதிய ஜனதா அரசு விரும்பாததே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் தெரிவித்துள்ளனர். அநேகமாக வரலாற்றிலேயே 17- ஆவது மக்களவை தான் துணை சபாநாயகர் இல்லாம லேயே நிறைவடையும் அவையாக இருக்கும்.

அரசியலமைப்புச் சட்ட விதியை சபை கடைப்பிடிக்க வேண்டும்
இது குறித்து மக்களவையின் முன்னாள் பொதுச் செயலா ளர் பி.டி.டி. ஆச்சார்யா  கூறுகையில், "மக்களவையின் முழுப்  பதவிக்காலத்தில் துணை சபாநாயகர் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது" என்றார். துணை சபாநாயகர் இப்போது சபையால் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்திய மில்லை. இப்போது தேர்ந்தெடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. சபாநாயகருடன் சேர்ந்து தான் துணை சபாநாய கரும் தேர்வு செய்யப்படுவர். முதலில் சபாநாயகரை தேர்ந்தெடுப்பது நடைமுறை. ஒரு வார காலத்திற்குள் துணை சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படுவார். . 

அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்டாய விதி இருக்கும் போது, ​​சபை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டியது மக்களவை தான். இதை தேர்வு செய்யப்பட்ட அரசு தான் முன்மொழியும். சபாநாயகர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்  துணை சபாநாயகர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார். துணை சபாநாயகர் குறித்து எழுத்துப்பூர்வ விதி இல்லை யென்றாலும் பல சமயங்களில் துணை சபாநாயகர் பொறுப்பு நட்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, இதையே பாஜக செய்திருக்கலாம்" என்றார்.அரசியலமை ப்புச் சட்டத்தின் 93-ஆவது பிரிவும் கூட , சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை "விரைவில்" தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

இத்தனை காலம் இல்லாமலிருப்பது இப்போதே!
நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் புள்ளி விவரக் கையேட்டின்படி , துணை சபாநாயகர் அதிகபட்சம் சில வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். இதற்கு முன்னர் 12-ஆவது மக்களவை தான் துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டது, அன்றைக்கு, ஜி.எம்.சி.பாலயோகி சபாநாயகராக இருந்த போது, ​அன்றைய​ பிரதமர் வாஜ்பாய் பி.எம். சயீதை (லட்சத்தீவு) துணை சபாநாயகராக தேர்வு செய்ய 270 நாட்கள்  ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், 17-ஆவது மக்களவை, அதன் முழுக் காலத்துக் கும் துணை சபாநாயகர் இல்லாமலே முடியும் அவை என்ற கரும்புள்ளியை பதிவு செய்யப்போகிறது.  17-ஆவது மக்களவை முடியும் நிலையிலும் துணை சபாநாயகர்  தேர்வு செய்யாமல்  இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்கும், எதிர்க்கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருப்பதற்கும் பின்னால் பாஜகவின் ஜனநாயக விரோத எதேச்சதிகாரச் சிந்தனை இருக்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.