சமீபத்தில் நிறைவு பெற்ற ராஜஸ் தான் சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. நீண்ட இழுவைக்குப் பிறகு முதல்வ ராக மக்களிடையே அதிகம் அறியப் படாத பஜன் லால் ஷர்மா தேர்வு செய் யப்பட்ட நிலை யில், தொடர்ந்து கடந்த வாரம் அமைச்சரவை விரிவாக் கம் செய்யப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் கள் புத்தாண்டில் தங்களது பணியைத் தொடங்கிய நிலையில், மாநில கேபினட் அந்தஸ்தில் இருக்கும் இளம் அமைச்ச ரான அவினாஷ் கெலாட் முதல் வேலை யாக தனது அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த முக்கிய தலைவர்களின் புகைப்படங்களின் தொகுப்பிலிருந்து மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை நீக்கி, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் (உடனே கழற்றி விட்டதால் யாரென்று தகவல் வெளியாகவில்லை) புகைப்படத்தை வைத்துள்ளார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலை யில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. அதில்,”அமைச்சரானதும் அரசியலமைப்பின் தந்தையாகப் போற் றப்படுபவரின் புகைப்படத்தை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் நிறுவனரின் புகைப் படத்தை அங்கு மாட்டியிருக்கிறார்” என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளது.