india

பேடிஎம் முறைகேடு

தணிக்கை விதிகளை மீறி பணமோசடி செய்  ததாக நாட்டின் பிரபல ஆன்லைன் பணப்  பரிவர்த்தனை செயலியான பேடிஎம் நிறு வனத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்தது ரிசர்வ் வங்கி. இந்த தடை பிப்.29-ஆம் தேதி முதல் அம லுக்கு வரவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வழக்கு  விஷயம் என்றால் உடனே ஓடி வரும் அமலாக் கத்துறை, பணமோசடி விவகாரத்தில் தடை உத்த ரவை பெற்றுள்ள பேடிஎம் நிறுவனத்திற்கு எதிராக  இன்னும் வழக்குப்பதிவு வேலையை கூட துவங்கா ததற்கு காரணம் பேடிஎம் நிறுவனர் விஜய் சர்மா  பிரதமர் மோடியின் பக்தராக இருப்பதால் தான் அம லாக்கத்துறை அமைதியாக உள்ளது என காங்கி ரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்க ளைத் தொடர்ந்து பேடிஎம் முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறை புதனன்று முதற்கட்ட விசா ரணையைத் தொடங்கியுள்ளது.

மோடி அரசின் முடிவுக்காக காத்திருந்த அமலாக்கத்துறை
தடை உத்தரவை ரத்து செய்ய உதவுமாறு பேடிஎம் நிறுவனர் விஜய் சர்மா ஒன்றிய நிதி யமைச்சகத்திடம் மன்றாடி உள்ளார். ஆனால்  நிர்மலா சீதாராமன், “இது ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறை நடவடிக்கை. இதில் அரசு உதவ முடியாது” என கை விரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் கூறிய பின்னரே பேடிஎம் நிறுவ னத்திற்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை யில் இறங்கியுள்ளது. அதாவது மோடி அரசின்  முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருந்துள்ளது நிரூபணமாகியுள்ளது.